பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔚莎 லா. ச. ராமாமிருதம் பக்த சரிதங்கள், பாமாலைகள்-ஒரு சமயம் கெஞ்சல், ஒரு சமயம் கொஞ்சல், ஒரு சமயம் ஏசல்-ஆண்டவன் அம்மு வாத்து பண்ணையாள். நம்மையே அவனுக்கு ஆயுசுக்கு வாரத்துக்கு விட்டாச்சு. வேளா வேளைக் கொடுக்க வேண்டியதை அவன் கொடுத்துத்தானே ஆகணும். அவனைக் காலில் கட்டி அடி-என்கிற முறையில். அம்முவாம் என்றுமே சின்னக் குடும்பமாக எனக்கு நினைவு தெரிந்து இருந்ததில்லே. தாத்தாவுடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள். இரண்டு தங்கைகள், அவரவர் குடும்பமும் கச்சிதமானதல்ல, வெற்று நாளிலேயே பகலுக்கு மூணு படியேனும் வடித் தாகனும் (இரவுக்குத் தகராறு) அசட்டு மானம் கொண்டாடி என்ன பயன்? ரூபாய்க்கு எட்டு படி விற்ற அந்த நாளிலேயே அத்தனை வயிறு வளர்க்க என் பாட்டனார் சம்பளம் எப்படிப் பற்றும்? எங்கள் லால்குடி வீடு எங்கள் வீடாக இருந்த கட்டடம் இதோ மனக்கண் முன் எழுகிறது. எனக்கு அப்போ வி:ய்து ஆறு. வாசலில் ஒலைக்கூரை கவிந்த இரண்டு திண்ணைகளுக் இடையே படிகளுக்குப் பதில் சரிவாய் வழித்துவிட்ட வாசல் தாண்டினவுடனே நடையில் ஒழுங்கையுள். தலைமுறை தலைமுறையாக அம்மாவாத்து பிரசவ அறை. இதிலிருந்து எத்தனை இளவரசுகள், ராஜகுமாரிகள் புறப்பட்டிருக் கிறார்கள். அதன் இருட்டுக்குக் கர்ப்பக்இரகம் தோற்றது. மருத்துவச்சி குழவியின் உடம்பைத் தடவித்தான் བསྐྱལ་ལོ་7 ஒபண்ணா கண்டு சொல்ல வேண்டும்.