பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒全 லா. ச. ராமாமிருதம் இப்போ மெய்சிலிர்க்கிறது. ஒரு திவசம், திங்களுக்கு, சகோதர சகோதரிகள் அவரவர் குடும்பத்துடன் ஒன்று கூடுகையில் வீடு தியிலோ கம்தான். தாத்தா, உடன் பிறந்தவர்கள் எல்லோருமே வாட்டசாட்டமாய் (தங்கைமார் உள்படத்தான்) தழல் சிவப்பா.சுந்தரம் சுந்தரமாகவே இருந்ததால் சுந்தரம் பிச்சை, கடைசிவர் (போலீஸ்) குத்து மீசையும் தொந்தியும் தொப்பையுமாய், தோளுக்கு ஒருகதிை கொடுத்துவிட்டால், மாயாபஜார் ராகவன்தான். அவர் பிரதாயங்களே தனிக் அதை சொல்லும். சொல்ல எனக்கும் நேரமும் வாய்ப்பும் அமையனும். தாத்தா தமிழ்ப் பண்டிதர். ஆனால் வம்ச ரத்தத் திலேயே தமிழ் ஒடிற்று. கூடத்தில் ஒரு காலை மடித்து மறுகாலை அதன்மேல் யோகாசனம்போல் மடித்துப் போட்டு உட்காருவது இவர்களின் போது அம்சம் போலும், 'நான் சொல்றேன். விபீஷணன் ஒரு பிராத்ருத் ரோஹி!" "தந்தேன் விபீஷணா லங்காபுரி" யார் வீட்டு சொத் தைத் தூக்கி யாருக்குக் கொடுக்க இவன் 盟、广行?”“ விபீஷணன், சுக்ரீவன்-அவன் இன்னொரு பிராத்ரு த்ரோஹி (இந்த ப்ரயோகத்தில் ஒரு தனி மோகம் சலாம் போட்டு சேவகம் செய்ய ஒரு ஹனுமான்-ஏவலுக்கும் இசைச்சொல் கேட்டுக்கவும் வீட்டிலிருந்தே அழைத்து வந்து விட்ட ஒரு லஷ்மணன் வேலை இடாமலே செய்ய, கத்தி இத்தனைபேர் நடுவில் இடிச்சபுளி மாதிரி இருந்துட்டு இவன் ஒரு காவிய நாயகனாம்!” "ஆமாம் இந்திரஜித் பைசலான பின் ராவணனைக் இகால்றது என்ன கஷ்டம்? செத்த பாம்பு அடிக்கிற மாதிரி-’’