பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( வா. ச. ராமாமிருதம் பிறகு யார் முதலில் கண்டார்களோ தெரியாது. பளபளக்கத் தேய்த்த பித்தளைச் சொம்பில் (எங்கள் வீட்டு ஏனம் இல்லை) ஆவி பறக்கப் பால் , ஒரு தார் வாழைப்பழம், அம்மன் பலகையில் இருந்தன. யார் கூடத்துள் வந்து வைத்திருக்க முடியும்? அதற்கு வழியு மில்லை. அந்தப் பாலும் பழத்தின் ருசி சொல்லுபடி போகாதாம் , பெருந்திருப் பிரசாதம் வேறு எப்படி இருக்கும்? லால்குடியில் வீட்டுக்கொரு சப்தரிஷி, ஒரு பெருந்திருபூரீமதி. என் கொள்ளுப்பாட்டி பெந்து (பெருந்திரு) என் தாய்வழிப் பாட்டி ஆரீமதி. அம்மா ரீமதி: அப்பா சப்தரிஷி. எங்கள் வீட்டில் பிறந்துவிட்டு, இந்த சாஸ்னத்துடன் தான் எழுதாமல் எப்படி இருக்க முடியும்?