பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்பர் 姿5・ முதலியார் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு. 'மண்ணை வெச்சிட்டு என்ன செய்யறதுங்க அதைப் போன்னாக்கும் கை யாருடையது? அம்மா வந்த அன்னிக்கே சொன்னேனே வீட்டுக்கு மஹாலச்சுமி வந்தாச்சுன்னு, முதலியார் பிரமாதமாய்ப் பேசுவார். ஆனால் அவர் கண்கள் இப்போது துளும்பின. கூடவே புன்னகையில் கன்னங்கள் நெகிழ்ந்தன. முதலியாரும் அவர் மனைவியும் பக்கத்தில் பக்கத்தில் ஜோடி யானைக்குட்டிகள். O நாங்கள் இருபது வருடங்கன் இந்திக் கிராமத்தில் வாழ்ந்தோம். எங்கள் குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம் இங்குதான் கழிந்தன. பிறகு மேலே படிக்கச் சென்னைக்கு நாங்கள் பையன்கள் சிற்றப்பா வீட்டுக்குச் சென்றாலும், மைக்கல்ம்ஸ், கிறிஸ்துமஸ், கோடையென அவ்வப்போது விடுமுறைக்கு என்று திரும் பிவிடுவோம். அப்போது இங்கி ருக்கும் நேரமெல்லாம், விடுமுறை கழிந்ததும் சென்னைக்குத் திரும்பணுமே என்ற கசப்பு, சென்னையில் இருக்கும்போது, - 奕伦 o மறுவிடுமுறைக்குக் காத்திருக்கும் t: அப்படியோரு காலம், சங்கள் வாழ்க்கையிலேயே சந்தோஷமான சத்தான நாட்கன் இந்த வீட்டில்தான். எளிமையான வாழ்க்கையில் 杀 களங்கமற்ற சந்தோஷங்கள். په مم, தினப்படி எனக்கொரு வியப்பு: அம்மா எப்போ குனித் தான்? ஏனெனில், நாங்கள் என்ன கருக்க எழுந்திருந்தாலும் அதற்கு முன்னேயே அம்மா குளித் திருந்தாள். விடிகாைை. யில் எழுந்துவிடுவாள். 'வசுதேவ பாலனே அசுரகுல காலனே எழுந்திரும் யசோதா நந்தனே நந்தகுமாரனே பிருந்தாவன நவநீத சோரனே எழுத்திரும்' |லோலனே