பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மா 部蠶 வெள்ளைப் பசு. நாளடைவில், கூந்தலின் கறுகறு, சாம்பல் நிறமாக மாறி, அது அலை துரையாகி, மஞ்சள் பூத்து, சமுதாயம் நெற்றியில் அழித்துவிட்டாலும், பிறவியின் மங்கலம் தழைத்து, வாழ்க்கையின் அடிமேல் அடிக்கு வைத்த பெயர் அனுபவம் மேல் பூத்த புற்றினுள் தன் விரக்தியின் தனி மையில் வீற்றிருந்தாள். விரக்தியா? வீம்பா? அம்மா பெயர் ஆரீமதி. வாழ்க்கையில் அம்மா ரொம்ப அனுபவித்துவிட்டாள். சின்ன வயதிலேயே பெற்றோர்களை இழந்து, திருமணமான பின், பங்களுரில் குடித்தனம் பண்ணுகையில் ஒரே வாது இடைவெளியில் தம்பிகள் இருவரையும் ப்ளேக்கில் இழந்து அம்மாவும் அண்ணாவும் கோடைவிடுமுறைக்குச் சென்னைக்கு வந்திருந்த சமயத்தில், அண்ணா திடீரென்று இறந்துபோனார். அந்த வாரத்துக்குள்ளேயே. வீட்டு மாப்பிள்ளை, ஜூரத்தில் அம்மா கிராமத்துக்குத் திரும்பவேயில்லை. பின்னை களுடன் தங்கிவிட்டாள் : சில வருடங்கள். இன்னொரு பெண்ணை ஜூரத்தில் இழந்தாள். அடுத்த வருடம் என் தம்பி, மாரடைப்பில். குடும்பத் தின் துரண். ஆண்டவனே, உனக்குக் கண் இல்லையா?* கதறு திறோம். துடிக்கிறோம். துாற்றுகிறோம். அடுத்தே விதி யாரை விட்டது?’ என்று கண்ணிரைத் துடைத்துக்கொள் இறோம். தத்துவம் பேசுகிறோம். சிரிக்கிறோம்.