பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

弱盛 லா, ச. ராமாமிருதம் விவஸ்தை கெட்ட ஜன்மா ரோசம் கேட்ட பிழைப்பு. ஆனால் திருடனுக்கும் கன்னக்கோல் சார்த்த முலை இண்ைடும். ○ என் கசப்பில் நான் சொல்கிறேன். ஆனால் அம்மாவிடமிருந்து இதுவரை ஒரு வார்த்தை வந்ததில்லை. அம்மா வெளிக் காண்பித்துக் கொள்ளமாட்டாள். அது அவள் சுபாவம். ஆனால் இப்போதெல்லாம் அவ்வப்போது நெஞ்சைத் தடவிக்கொள்வாள். விடமுண்டகண்டன் தேவாரத்தில் வருகிறதோ? உள்ளே இறங்கவில்லை. என்னம்மா பண்றது’ 'நெஞ்சை அடைக்கிறது சரியாப் போயிடும். குடிக்கத் தண்ணிர் கொடேன். ஊம், அம்மாடி! சரியாப் போயிடுத்து. AேS அடைச்சிருக்கு." {} ஆனால் சரியாய்ப் போய்விடவில்லை. இந்த நெஞ்ச டைப்பு மாதம் ஒருமுறையிலிருந்து இருமுறையாகி, அப்புறம் வாரம் இருமுறை, அப்புறம் தினம், எப்போ வேனுமானா லும் வேளையே கிடையாது. உயிர் விடுதலைக்குத் தயாராயிருக்கிறது. உடல்தான் லேசில் அதை விடுவதில்லை. உயிரோடு பூமியில் விழுந்த திலிருந்து இத்தனை காலம் உயிருடன் பழிக்கம், உடல் தன் அழிவை லேசில் ஒப்புக்கொள்வதில்லை. பிடியை லேசில் விட மறுக்கிறது.