பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 லா. ச. ராமாமிருதம் அதை எழுத்திலும் காப்பாற்றுவது எப்படி? பாஷையில் ஓரளவு அக்கறை உள்ள எந்த எழுத்தாளனுக்கும் இதுவே அவன் தன்னைக் கேட்டுக்கொள்ளும் கேள்வியாக இருத்தல் வேண்டும், கேள்வியாகவே இருத்தல் வேண்டும். எழுத்துப் பத்திரிக்கையில் எப்பவோ நான், "நான்' என்று ஒரு கட்டுரை எழுதினேன். எழுத்தின்மேல் எனக்கு இருக்கும் ஆர்வத்தைச் சொல்கையில் ஒரு சொற்றொடர் 'நெருப்பு என்றால் வாய் வெந்துபோக வேண்டும் அதை கேவியாகவோ பாராட்டாகவோ இன்னமும் நேயர்கள் அவ்வப்பொழுது ஏற்படும் புது-வாசகர்கள் எனக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கும் சொல்லிக் கொள்கிறார்கள். சொற்களை அவைகளின் Creative Process உடன் இணைத் துப் பார்க்கத் தேவைப்படுவதால் மேற்கண்டதை நான் சொல்ல வேண்டியிருக்கிறது. - இதில் எதை அடக்குவேன். எதை விடுவேன். Creative Process எனும் பெயரெச்சத்தின் வேர்ச்சொல் Creationஅல்லவா? ஸ்ர்வ கபளிகரி அது, பிறப்பு வாழ்வு, தாழ்வு, ஓங்கல், மங்கல், பொலிவு, நலிவு, ஒய்வு, மாய்வு-எல்லாமே Creative Processதான் பெரிது பெரிது புவனம் பெரிது அதனினும் பெரிது சிந்தனை, ஏனெனில் சிந்தனையில் புவனத்தையே சிருஷ்டிக்கிறேன். ஆம் காலையில் கண் திறக்கிறேன். சிந்தனையின் ஓவியம் இதோ என் பூமி. இரவு கண் மூடுகிறேன். அப்பவே மாய்ந்தேனோ என்னவோ? என் புவனமும் அழிந்தது. அன்றன்று ஒன்றொன்று அவனவன் பூமி, இதைத் தானே இலக்கியம் பின்னியாகிறது? Cycle of evolution sy Creative Process geït egGuurfgrgir, grtripsir கிருஷ்ணன், ரிஷிகள், புத்தர், சங்கரர், நபிகள் நாயகம் *n šg 14.6iv . Confucius @sargguh g)gir Supermert