பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; : : \f; ; 1 சொத்தென்னவோ சேர்த்தபோது எனக்குத் தான். ஆனால் என்னோடு எடுத்துக்கொண்டு போகமுடியாதே ஆகவே பங்காகட்டும். அதுவும் சாதனைதான் . சொத்து என் கையில் தரு விசனமும் உறுத்து கிறது. என் அறியாமை, அஜாக்ரதை, முன் யோசனையின்மையால், எழுத்துத் துறையில் இந்த ஐம்பது வருடங்களுக்கு மேம்பாடான ஈடுபாடில் குறைந்தது பதினைந்து ஆக்கங்கள் (அச்சானவை) அங்குமிங்குமாய்ச் சிதறுண்டு காணாமல் போய், இன்றுவரை கிடைக்கவில்லை. தேடிக்கொண்டே யிருக்கிறேன். நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது என் காணாமல் போன குழந்தைகள். தொகுக்கும் காரணத்தில், இந்தப் புத்தகத்தின் விஷயங்களை மீண்டும் படிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது , எனக்கு என் கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் பிரமாத வித்யாசம் தெரியவில்லை. மனம் எப்படிப் பழக்கப்பட்டிருக்கிறதோ அப்படித் தான் நினைப்பு. நினைப்பின் படித்தான் அதன் எழுத்து. "நான் இல் ஆரம்பித்து எழுத்தாளன் பாடும் கீதம் வரைக் காலவீச்சு ஏறக்குறைய நாற்பது வருடங்கள். "சொல்லோடு என் உறவு இந்தக் கட்டுரை, ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகம் நடத்திய இலக்கியப் பட்டறையில் நான் கடித்தது. அவர்கள் எனக்குக் கொடுத்த &anseli j (The word and the creative process) கேட்டவர்கள், அப்பவே, அது கதைப் பாணியில்