பக்கம்:உதட்டில் உதடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளிவீசும் வெள்ளைக் கம்மல்,
கண்ணம்மா காலில் ஒட்டிக்
கொண்டுள்ள சிலம்பு, அந்தக்
கன்னியின் கையில் சுற்றிக்
கொண்டுள்ள வளையல் பார்த்தான்.

இடதுகை தன்னில் ஒடும்
கைரேகை தன்னைப் பார்த்து
“ வெடித்திட்ட அரும்பே! ஆறு
வாரத்தி லேகல்யாணம்
நடந்திடும்; உனக்குப் பிள்ளை
நானன்கு பதின” றென்றன்.
உடைக்காத சிறு உளுந்தின்
உட்புறம் போல் சிரித்தாள்.

அரிசியைக் கேட்க வந்த
எதிர்வீட்டுக் கிழவி “ஐயா !
சுரைக்காயின் விதையைப் போலே
சிரிக்கின்ற மாதை, இன்னும்
பறிக்காத பூவை, கொய்யாப்
பழத்தினை, பறிக்கக் காத்து
இருப்பவன், இவளே மாலை
இடுபவன் அழகன் தானு ?

படிப்போடு ஒழுக்கம் உள்ள
பையன? இன்பம் காணத்
துடித்திடும் வயது வந்த
தோகைக்குப் பொருந்து வான?
எடுத்துரை !” என்று கேட்டு
இடதுகை விரலை நெட்டி

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/17&oldid=1067479" இலிருந்து மீள்விக்கப்பட்டது