இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான்கு வேளை
காலை
அவன் : நீலக் கிழக்கு சுடர் ஆச்சு-வயலில்
நிற்கும் கதிர்கள் முற்றிப் போச்சு ;
அவள் : ஆகையினால் நீங்க
அறுவடைக்குப் போங்க
அதற்கு அரிவாள் இந்தாங்க!
பகல்
அவன் :நெருப்பு வெய்யில் வந்தாச்சு-பனைமர
நிழலை நம்பி வீணாச்சு ;
அவள் : அந்தத் துயர் நீங்க
வந்த வெய்யில் தாங்க
முந்தானைக் குடை இந்தாங்க !
அந்தி
மேற்கு வானம் ரத்தம் ஆச்சு-உன்னால்
மலர்ந்த உதடு வெள்ளை யாச்சு ;
அவள் : வாசனையும் ஓங்க
சிவப்பு நிறம் தேங்க
வெற்றிலைப் பாக்கு இந்தாங்க !
18