இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
சம்மதம்
ஆண் : நிமிர்ந்த பம்பரம் போல-யானை
நெற்றியின் மேடு போலே-மலை பாராய்!
பெண் : ஆகாயம் கட்டிய கொட்டகையோ மலை-கண்ணா?
ஆண் : அசைகின்ற பூமியின் கொப்புளந்தரன்மலை-கண்ணே!
ஆண் : பாம்பின் சட்டையைப் போல-வெடித்த
பட்டையில் ஊற்றிய பால் போல-அருவி பாராய்!
பெண் : பெண்கள் உடுத்தும் மேல் ஆடைதான் இப்படி ஆச்சோ?
ஆண் : தண்ணீர்க்கும் வால் உண்டு என்பதற்(கு) இது சாட்சி!
ஆண் : மரகதக் கம்பளம் மேலே-மயில்
இறகுகள் சிற்பது போலே-தோட்டம் பாராய்!
பெண் : காதலரால் இந்தத் தோட்டம் கசங்காகோ-கண்ணா?
ஆண் : குளிர்ந்த பனித்துளியாலே கல் உடையுமா-கண்ணே!
பெண் : எறும்பு எந்திய பொரி போலே-சோழி
இரண்டு சேர்ந்தது போலே-அரும்பு பாராய்!
ஆண் : இந்த அரும்புக்(கு) எப்போது கல்யாணம் ஆகும் ?
பெண்: இதழ்கள் மலர்ந்தபின் வண்டுக்(கு) இது தாரம் ஆகும்!
23