இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
என்றனேக் கைப்பிடித் தாளுறும் இறைவன்
எழில்பெறு மலர்விழி மலர்ந்தெழு சமயம்
உன்றன துளவிருள் போக்குவன் நோக்கால்
ஒல்லையில் வருகென எல்லினைக் கூவி
நின்றன திருங்கொடி அழைத்துறு முறைபோல்
நீடுறு மனைதொறும் கூவின மிகவும்
இன்றெனே ஆண்டுகொண் டருளிய போரூர்
இறையவ னேபள்ளி எழுந்தரு ளாயே. 4
மன்மதன் விருதுகள் ஊதின பொழில்வாய்
மாயவன் கரப்படை தொனித்ததுன் எதிரே
தென்மலி மலரவன் ஊர்திகள் தடத்துச்
சிலம்பின நின்கொடி பதவெச்ச ரிக்கை
பன்முறை பண்ணுவ போல்மனே தோறும்
பாழியங் குரலொலி காட்டின அருளால்
என்மல இருள்தெறும் ஆரிய போரூர்
இறையவ னேபள்ளி எழுந்தரு ளாயே. 5
கின்னரர் கிம்புரு டர்களொடு கெருடர்
கெந்தரு வர்கள்சித்தர் வித்தியா தரரும்
மன்னிய முரசதிர் சிகரியின் வாய்தல்
வந்தனர் ஐந்தெழில் வாத்தியம் தொனித்தார்
பொன்னில மடவார் இங்கில மடவார்
புரிந்தனர் நாடகம் இருந்தகை மயில்போல்
இன்னருள் பொழிமுகி லேதிருப் போரூர்
இறையவ னேபள்ளி எழுந்தரு ளாயே. 6
வானவர் புகழ்வை வீரர்கள் ஒருபால்
மால்வரை யனகண நாதர்கள் ஒருபால்
தீனமில் எண்டிசைப் பாலகர் ஒருபால்
தேவர்கள் முனிவர்கள் பாதலர் ஒருபால்