பக்கம்:உதயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அருட்பெருஞ்சோதி திருப்பள்ளியெழுச்சி

15

முனைப்பள்ளி பயிற்றதென் றனைக்கல்வி பயிற்றி

முழுதுணர் வித்துடற் பழுதெலாம் தவிர்த்தே 

எனப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி

என்னப்ப னே பள்ளி எழுந்தரு ளாயே.                           7

மதம்பிடித் தவரெலாம் வாய்பிடிப் புண்டு

வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான் 

கதம்பிடித் தவரெலாம் கடும்பிணி யாலே

கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றர் 

பதம்பிடித் தவரெலாம் அம்பலப் பாட்டே

பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றர் 

இதம்பிடித் தெனேயாண்ட அருட்பெருஞ் சோதி என்னைய னே பள்ளி எழுந்தரு ளாயே. 8

மருளொடும் மாயைபோய்த் தொலைந்தறு மதங்கள்

வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்

அருளொளி விளங்கிய தொரு திருச் சபையும்

அலங்கரிக் கின்றனர் துலங்கிவிற் றிருக்கத்

தெருளொடும் பொருளும்மேல் மேலெனக் களித்துச்

சித்தெலாம் செய்திடத் திருவருள் புரிந்தே 

இருளறுத் தெனேயாண்ட அருட்பெரும் சோதி

என்வள்ள லேபள்ளி எழுந்தரு ளாயே.                             9

அலங்கரி க்கின்ருேமோர் திருச்சபை யதிலே

அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை 

வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவ

வாழ்த்துகின் றேம் முன்னர் வண்ங்கிநிற் கின்ரறேம்

விலங்கிய திருளெலாம் விடிந்தது பொழுது

விரைந்தெமக் கருளுதல் வேண்டுமித் தருணம்

இலங்குநற் றருணம்எம் அருட்பெரும் சோதி எனத்ங்தை யேபள்ளி எழுந்தரு ளாயே. 10

                 ————————
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/17&oldid=1198255" இலிருந்து மீள்விக்கப்பட்டது