பக்கம்:உதயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி

17

நின்னெழில் விழியருள் காண்பதற் கெங்கள்

நெஞ்சகத் தாவலே யேறி யாயோ? 

பொன்னனே யாய்வெண் பனிமுடி இமயப்

பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே 

என்ன தவங்கள்செய் தெத்தனை காலம்

ஏங்குவம் கின்னருட்கு ஏழையம் யாமே 

இன்னமும் துயிலுதி யேலிது நன்றே ?

இன்னுயி ரேபள்ளி எழுந்தரு ளாயே.                           4

மதலேயர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?

மாநிலம் பெற்றவள் இஃதுன ராயோ? 

குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?

கோமக ளேபெரும் பாரதர்க் கரசே 

விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி

வேண்டிய வாறுனைப் பாடுதும் காணுய் 

இதமுற வந்தெமை ஆண்டருள் செய்வாய்

ஈன்றவ ளேபள்ளி எழுந்தரு ளாயே.                              5


       —————————
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/19&oldid=1198357" இலிருந்து மீள்விக்கப்பட்டது