பக்கம்:உதயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவெம்பாவை

21

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி 

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல்

செய்யாவெண் ணீறடி செல்வா சிறுமருங்குல் 

மையார் தடங்கண் மடங்தை மணவாளா

ஐயாநீ ஆட்கொண் டருளும் விளே யாட்டின் 

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.             11

ஆர்த்த பிறவித் துயர்கெடகாம் ஆர்த்தாடும்

தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் 

கூத்தனிவ் வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி 

வார்த்தையும் பேசி வளேசிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் 

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோ ரெம்பாவாய்.               13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் 

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினுல்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைக்த 

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் 

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்.             18

காதார் குழையாடப் பைம்பூண் கலனுடக்

கோதை குழலாட வண்டின் குழாமாடச்

சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி

வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/23&oldid=1200455" இலிருந்து மீள்விக்கப்பட்டது