இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25
ஆழி மழைக்கண்ணு ஒன்று கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியக் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வ்லம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் காங்களும் மார்கழிநீ. ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 4
மாயனே மன்னு வடமதுரை மைந்தனே
.துாய பெருநீர் யமுனேத் துறைவனே
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனே
தாயோமாய் வந்துகாம் தூமலர் து வித்தொழுது
வாயில்லை பாடி மனத்தினுல் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் துாசாகும் செப்பேலோ ரெம்பாவாய். 5
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலேயோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலே நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினே
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 6
கீசுகீ சென்றெங்கும் ஆனேச்சாத் தன்கலங்து
பேசின பேச்சரவம் கேட்டிலேயோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினுல்