பக்கம்:உத்தரகாண்டம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    299


“சரி மேடம். பாத்துக்க. பெரியசாமி, பத்திரமா கூட்டிட்டுப் போயி ஸ்டேசன்ல எறக்கிடுங்க!”

அவன் கையில் ரூபாய் நோட்டை வைக்கிறாள்.

அவர்கள் அந்த எல்லையை விட்டுச் செல்கிறார்கள்.


30

ருளே பிரியவில்லை. கன்னியம்மா அவள் கையைப் பற்றி, எழும்பூர் ரயில் நிலையப் படியில் உட்கார்த்தி வைக்கிறாள். எதிரே, எதோ பஸ்கள் உறுமுகின்றன. பயணிகள் ஏறுகின்றனர். தேநீர்க்கடையில் சுருசுருப்பாக வியாபாரம் நடக்கிறது. ஏதேதோ ஊர் பெயர் சொல்லிக் கொண்டு ஆட்களை அழைக்கிறான் ஒரு பையன்.

“ஒரு டீ வாங்கியாரட்டுமா ஆயா?”

“வாணாம்பா, உனுக்கு வாங்கிக் குடிச்சிக்க...”

அவள் எழுந்திருக்கவில்லை. மின் வண்டிக்குச் செல்லும் பாலத்திலும் கீழும் பரபரப்பு. விடிந்து விட்டது. தபதபவென்று கூட்டம். ரயில் பெட்டிகளில் இருந்து இறங்கி ஓடி வருகிறது. திடீரென்று காக்கிச் சட்டைப் போலீசு எங்கிருந்தோ வந்து மொய்க்கிறது. கன்னிம்மா இவளை உள்ளே பெஞ்சியில் கொண்டு உட்கார்த்துகிறாள். பையை அவளிடம் கொடுத்து “பத்திரமா வச்சிக்க, நான் டிக்கெட் எடுத்திட்டு வாரேன், எதனாலும் வாங்கியாரேன். இத நிக்கிற வண்டிதா போவும்கிறாங்க. பத்திரமா இரு...” அவள் போகிறாள்.

சூரியன் பளீரென்று தெரிகிறது.

இந்த நிலையத்தில் நேராகக் கார் உள்ளே வரும். இவள் இப்போது உட்கார்ந்திருக்கும் இடத்தில் கார் வருமா? எதுவும் தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/301&oldid=1050415" இலிருந்து மீள்விக்கப்பட்டது