பக்கம்:உத்திராயணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்ப்பம் 虚む5

டறையில் தள்ளி மூஞ்சியிலும் முதுகிலும் மாரிலும் இங்கு தான்னு இல்லாமல் கண்ட இடத்தில் அடி அடின்னு அடிச் சிருக்கா பாரு, அடிச்சு, மண் மிதிச்சு

என்னடி உன் அக்காவுக்கு, நீ தங்கையா? சக்களத் தியா?"

என்னவோ எனக்குப் புரியாத வார்த்தை.

அப்படியே சாவு எனக்கு அக்கரையில்லை. கதவை. இழுத்து அந்தப்பக்கம் தாளிட்டுண்டு போயிட்டா.

அழுது அழுது வாயெச்சில் நூல் நூத்து, கண்ணிரும் எச்சிலுமா பரத்தியிருந்த உருளைக்கிழங்கு மேலே அந்தக் கோஸ் நாத்தம், பச்சைமிளகாய் நெடி. நடுவில் தூங்கிப் போயிட்டேன்.

豪 激 $

அக்காவை நான் பார்க்க முடியல்லே.

விடிகாலையில் வண்டி.

மாப்பிள்ளைக்குத் தூர தேசத்தில் மிலிட்டரியில் வேலை . -

சிராய்ப்புகளுக்கு அம்மா தேங்காய் எண்ணெயைத் தடவிண்டே, ஏண்டி கலியாணச் சாப்பாடு சாப்பிட்டுட்டு காலையில் கண் முழிச்சது முதல் கொண்டு ஓயாத அரையல் மெஷின்-உனக்கு அந்தப் படுக்கையறைப் பட்சணத்துக்கு வயித்தில் எங்கேடி இடம் இருந்தது?"

ஏன் அந்த அக்காவும் அத்திம்பேரும் அந்தக் கவியாணச் சாப்பாடு சாப்பிடல்லியா? அவா வயித் திலே ஸ்பெஷலா அந்தப் பட்சனத்துக்கு இடமிருக்கும்போது எனக்கு இருக்கப்படாதோ?’’

இந்த மாதிரி கேள்வியெல்லாம் பெரியவாளால்தான் கேட்க முடியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/115&oldid=544204" இலிருந்து மீள்விக்கப்பட்டது