பக்கம்:உத்திராயணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 லா. ச. ராமாமிருதம்



இவனுக்கு அவன், அவனுக்கு இவன், சமயத்துக்கேற்ப ஒருவனுக்கு ஒருவன் உடுக்கடி: இவர்கள் பாஷையில் 'Boss.'

Tommy வாலையாட்டிக் காலை வந்தனம் தெரிவித்துக் கொள்கிறது. எங்கிருந்தோ, என்றோ வந்தது. எங்கோ போகிறது வருகிறது. திடீரென்று நினைத்துக்கொண்டு கனகாரியமாக ஓடுகிறது. எங்கு போனாலும், வந்தாலும் இரவு இங்குதான். எல்லாம் பகல் பத்துமணிக்கும், இரவு பத்துமணிவாக்கிலும், கிணற்றடியில் வைக்கும் ஒரு கவளம் சோறு பண்ணும் வேலை. "தொதோ' கூடக் கொட்ட வேண்டாம். எங்கிருந்தாலும் பறந்தோடி வந்துவிடுகிறது. சொறி பிடிக்கறது, சொறி உதிர்கிறது. ஆனால் கண்களில் மட்டும் உள்ளொளியின் அழகு மங்கவில்லை. வாலையாட்டிக்கொண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, 'நான் இருக்கிறேன் உனக்கேன் கவலை?' என்று கண்கள் பேசுகின்றன.

“சனியனே எட்டிப்போ காலைச் சுத்திண்டு!”

உதையை வாங்கிக்கொண்டு, குரைக்கக்கூட இல்லை. தென்னை மரத்தடியில், தான் ஏற்கெனவே பறித்து வைத்திருக்கும் பள்ளத்துக்குப் போய்ப் படுத்துக்கொள்கிறது.

“டேய், ரொம்பப் பொறுமையா இருக்குடா!”

“Yes, yes, முன் ஜன்மத்தில் ஸ்வாமிஜியா இருத்திருக்குமோடா?”

ஈதெல்லாம் நாயைக் குறிப்பிடுவன அல்ல. என் காது கேட்க என்னைக் கேலி பண்ணுகிறார்களாம். தனிப்பட்ட முறையில் அப்பாவை அல்ல. தலைமுறையைத் தலைமுறையின் பழிப்பு. எங்களை அவர்கள் பங்கப்படுத்துகிறார்கள்.

நடுப்பிள்ளை என்னைக் கேட்கிறான்: 'என்ன அப்பா வாரம் ஒருநாள் மெளன விரதம் என்று வாயை அடைச்சுட்டு. கண்ணால் பேசிக்கொண்டிருக்கிறாய். பேசுகிறாயா சுட்டெரிக்கிறாய். ஒரு கதவை மூடிவிட்டு இன்னொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/14&oldid=1147512" இலிருந்து மீள்விக்கப்பட்டது