பக்கம்:உத்திராயணம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹盛2 லா. ச. ராமாமிருதம்

அவன் நாற்காலியில் முழங்கால்களுக்கிடையே இரு கைகளையும் கோர்த்த வண்ணம், சுவரை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்.

வாசலில் கார் நிற்கும் சப்தம்.

செல்லம் அவசரமாய் மேலே ஓடிவந்தாள். உங்களை யாரோ பார்க்க வந்திருக்கா- என்று சொல்விக் கொண்டே. ஆனால் அதற்குள் அவளைத் துரத்திக்கொண்டு. மாடியேறி வரும் பூட்ஸ் கதவை அதட்டலாய்த் திறந்தது.

    • Heilo son! how are you? 6 FLtạisi ilir(5uốlabĜau?**

ஸ்ேதுவின் உடல் தானாக எழுந்தது. முகத்தில் மாறி மாறி சிவப்பு, நீலம், வெள்ளை-வாய்பிளந்து நாக்கே கூரையை முட்டிற்று. ஆனால் சத்தம் வரவில்லை. கை அவரைச் சுட்டிச் சுட்டிக் காண்பித்துத் தவித்தது.

what is the matter with you? Have you seen a ghost? Ah, இவள்தான் நாட்டுப் பெண்ணா, என்ன இந்த வயசி லேயே கிழவி ஆயிட்டையே? அவள் எங்கே? வழக்கப்ர காரமா? என்ன சொன்னாலும் அவள் திருந்தமாட் டாளே! "

ஸ்ேதுவின் கைகள் அவன் உடம்பில் எதையோ தேடித் தவித்தன. ஆ! தந்தியை உறையோடு நீட்டினான்.

உறையிலிருந்து எடுத்து அக்கண்கள் தந்தியை வெள். ளோட்டம் விட்டன.

“A mistake. These things happen; you know. 93r பேர். அதே initial. ஒரே rank-இதைச் சூடாமணி மாதிரிக் காப்பாத்தி வெச்சிருந்தையா?*

தந்தி நாலு சுக்கல்களாய் அவர் காலடியில் விழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/152&oldid=544240" இலிருந்து மீள்விக்கப்பட்டது