பக்கம்:உத்திராயணம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்துக்கள் 159

டாக்டர் கையை விரித்தார். என்னைக் கேட்டால்? நாளாவட்டத்தில் என்றால் நாளாவட்டத்தில்தான்வேனுமானால் ட்ராங்குலைசர் ஷாட் ஒண்னு கொடுக்க லாம்,'

கொடுங்களேன் டாக்டர்!’

நோ. ஏன் கொடுக்கணும்? பையன்களிடம் பொறுமை யாயிருங்கள். பிரியமாயிருங்கள். பெற்றவர்களுக்கு அதை விட என்ன வேலை '

நரேஷ் குறைப் பிரசவத்தில் பிறக்காவிட்டாலும் முன்னதுகளின் சகவாசம், அவனும் ஹைப்பர்.

இந்த மூவரிடையிலேயே வீடு நித்ய யுத்தகளமாகி விட்டது.

டேய், இன்னிக்கு நீ கொலைதான்."

தொட்டுப் பாரேன், உன்னை ஒழிச்சுக் கட்டிடு வேன்."

ஒருத்தன் கையில் கிரிக்கட் மட்டை மற்றவன் கையில் சாக்கடை குத்தும் இரும்புக் கழி.

இவர்கள் ஆடும் சிலம்பத்தில், நடுவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நரேஷ் மண்டையில் பட்டு, முளைத்து விடும். வில்

அம்புஜம் அமைதியாகப் படித்துக்கொண்டிருப்பாள்.

அத்திம்பேரே இதுவரை குறைஞ்சது இருபது தடவை படித்திருப்பேன். இந்த வி ஹார் ஆஃப்வேஃப்பீல்ட், அப்புறம் டேல் ஆஃப் டு சிடிஸ்- இது ரெண்டும் அலுக்கவே மாட்டேன்கிறதே! ஏன் அப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/169&oldid=544257" இலிருந்து மீள்விக்கப்பட்டது