பக்கம்:உத்திராயணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடை பெற நில் 25

இந்தத் தொண்ணுறு வயதுக்குள் மூனுதாரம், அதற்கேற்ற படி புத்ர சந்தானம், அது அது பிழைக்க எங்கெங்கேயோ நாலா திக்கும் சிதறியாச்சு,

குருக்கள் இஷ்டப்பட்டால் பதஸ்ா-பதஸ்ாரிகளிலாஆலமரமும் கிள்ளுக் கீரை.

ஏழைக்குப் பொழுதுபோக்கு ப்ரஜா விர்த்தி ஒண்ணு, இரவு எந்நேரமானாலும் ஒருநாள் கூட தவறாது, கூனப்ப முதலி கோட்டம் வந்து திருநீறு வாங்கிப் போவான். பேசமாட்டான். வாய்விட்டு வேண்டமாட் டான் நாடக பாணியில் கருடாழ்வான் போல் சாமிக் கெதிரே இரண்டு கைகளையும் ஏந்தி எதுவும் தோத்தரிக்க மாட்டான். அவனுக்காகவே கதிவைத் திறந்து வைத்துக் கொண்டு காத் திருப்பதும் உண்டாம். அது காலம் வேறப்பா. பூஜை ஆபீஸ் வேலையா மாறல்லே. ஒ.டி. கிடையாது! நேரத்தைப் பற்றி அக்கறையா யாருக்கும் யாராலும் ஆக வேண்டியதில்லே. ஒரு நியதி தானாகவே ஏற்பட்டு விட்டாலும்கூட அதைக் காப்பாற்றியாகணும். அதுதான் பிரதானம். வேலையும் நேரமும் வேள்வி. கடிகார முள் அல்ல. ஸர்வே ஜனா சுகினோ பவந்து:

1 * *

குருக்களுக்கு ஸம் ஸ்க்ருதம் என்றால் ரொம்பப் பிரியம்.

அத்தனைகளுக்கும் அவன் ஒருவன் சம்பாதனையில் எப்படிப் பண்ணிப் பண்ணிப் போட்டாளோ மஹராஜி: ஆனால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சொல்லி வைத் தாற்போல் அந்த அம்மாவுக்கு வயிறு சாய்ந்துவிடும்.

கூனப்ப முதலி முதுகோடு வயிறு ஒட்டி தறிமேல் கவிழ்ந்து நாடாவைத் தள்ளுவான்.

ஒரு வெள்ளிக்கிழமை காலை பத்து, பத் தரை இருக் கும். வீட்டில் அவனைத் தவிர யாருமில்லை. சாதாரண மாக அப்படி நேராது. ஒரு வாண்டேனும் அழுதுகொண் டிருக்கும். ஆனால் அன்றைக்கில்லை. அழகம்மை அடுப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/35&oldid=544124" இலிருந்து மீள்விக்கப்பட்டது