பக்கம்:உத்திராயணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடிக்கொண்டே இரு § 9

கண்ணாயிரம்.’’ சுரேஷ-க்குச் சிரிப்பு. ஒரேயடியாச் சிரிப்பு.

ஏன் சிரிக்கிறே துரை?" இருக்கிற ரெண்டு கண்ணே சரியில்லே, கண் ஆயிர ஆமாம்!' -

உஷ்...தவடையிலே போட்டுக்க தான் போட்டுக் கொண்டான். ஆத்தா வீசிடுவா, கோவம் வந்துட்டா."

"ஆத்தா யாரு?"

உனக்குத் தெரியாது தெரிய வேணாம். உனக்குக் கண் தெரியுமோ?* என் ஆத்தா என்னை வவுத்துலே சுமக்கையிலேயே அவ மேலே ஆத்தா சுமையா இறங்கிட்டா. பூத்த கண்ணோடு தான் குளந்தெ விளுந்தது. உடம்பெல்லாம் கண். அப்பவே குளுந் திட்டிருந்தால் இந்த அவதியெல்லாம் ஏன்? ஆனா அவள் சித்தம் இப்பிடி. இப்பிடியும் ஒரு புறான்னு அவள் கையாலே அந்தரத்தில் வீசியெறிஞ்சுட்டா. நானும் பறந் துட்டுத்தானிருக்கேன்.”

நீ சொல்றது ஒண்ணுமே புரியல்லே!’ குழந்தை!’

என்னைக் குழந்தென்னாதே' சீற்றத்துடன் பையன் கத்தினான்.

" அப்போ நீ என்ன தாத்தாவா?’’

அப்போ நீ என்ன தாத்தாவா? கண்ணாயிரம் செளகரியமாய்ப் புல்லில் சாய்ந்துகொண்டான். புல் மெத்தையின் லொகுலில் ஒரு மதமதப்பு. ஒரு புல்லைப் பிடுங்கி மெல்ல ஆரம்பித்தான்.

நான் தாத்தா இல்லே."

"ஏன் வெறி பிடிச்சு சுத்தறே? இப்போ என்ன ஆயிடுச்சு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/79&oldid=544168" இலிருந்து மீள்விக்கப்பட்டது