இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அகிலா
வாசல் திரைச் சீலையைத் தள்ளியதும் கூடத்தில் கட்டிலில் படுத்திருந்த உருவத்தைக் கண்டதும் என் விலாசம் தேடல் முடிந்தது. உடனே தெளிந்துவிட்டது. அப்போது தான் எதிர் அறையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்-பதினாறு, பதினேழு-என்னைக் கண்டதும் அவள் கண்கள் பூத்தன!
அம்மா! அவர் வந்துட்டார்!’ என்று சொல்லிக் கொண்டே நேரே என்னிடம் வந்து கைப்பெட்டியை வாங்கிக் கொண்டாள்.
நீதான் வைதேஹியா? சந்தோஷ வெட்கத்தில் முகம் லேசாய்க் குழம்பிற்று. மாநிறம்: குறு குறு.
என்னை எப்படித் தெரிந்தது உனக்கு?" முன்றானை யால் முகத்தைத் துடைத்த வண்ணம் அடுக்குளிலிருந்து அவள் தாய் வந்தாள்.
- வாங்கோ: இதோ காப்பி கலந்துண்டு வரேன். வைதேஹி, மாமாவைக் கவனிச்சுக்கோ. வைதேஹி இன் னொரு அறைக்கு என்னை முன்னிட்டாள்.
என்னை எப்படித் தெரிந்தது உனக்கு?’’
- கோமதி கடிதம் போட்டிருந்தாள்.'