பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13 ————————

உப்புமண்டித் தெரு


நுழையுமபோது
தனது
அம்மாவிடம்
‘வெஞ்சனமாக
வருகலும்
அப்பளமும் இல்லை’ என்பதற்காக
சாப்பிட மறுத்து,
சத்தியாக்கிரகம்
செய்து கொண்டிருந்தான்
செயல் மறவன் உலகப்பன்!


உள் உஷ்ணத்தை
உதட்டுக்குள்ளேயே
அடைக்க முயன்று
முடியாமல்
காறிக் கனைத்து;
இருமிக் கொண்டுப்
புழக்கடைப் பக்கம்
போனான் அய்யாக்கண்ணு!


தடிமாடாக
உலகப்பனை வளர்த்து
உதவாக்கரை யாக்கிய
புண்ணியவதி
அப்பளமும் வருகலும்
அவசரம் அவசரமாகத்
தயாரித்து கொண்டு வந்தாள்!