பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

—————————— 14


“சட்டுபுட்டுன்னுச்
சாப்பிட்டுட்டுப் போ...
அப்பா கோவமா
இருக்காங்க போல இருக்கு!”
என்றாள்.


நாலு பொறித்த அப்பளங்களையும்,
தட்டு நிறையப்
உருளை வறுவலையும்
அப்படியே
தன் சாப்பாட்டு தட்டுப் பக்கம்
தள்ளிக் கொண்டு
சொரைக்காய்க் குழம்பை ஊற்றிச்
சோற்றைப் பிசைய
ஆரம்பித்தான் உலகப்பன்!


வலது கை
சோற்றில் இருக்கும் போதே
இடது கையால்
ஒரு அப்பளத்தை எடுத்து
வாயில் வைத்துக் கடிக்கப்
போனான்
வயிற்றுப் பசியோடு இருந்த
செயல் மறவன் உலகு!


அப்போது;
புழக்கடையிலிருந்து,
தனது