பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29 ————————||||

உப்புமண்டித் தெரு

அருவருப்பிலும்
ஆத்திரத்திலும்
கொதித்தது...!

மருமகள்களோடு
சேர்ந்து கொண்டு
வீட்டுக்கார அம்மாளும்
'காச் மூச்' சென்று
கத்தினாள்!

மரியாதையைக் கூட
நீர்த்துப் போக விட்டு,
“என்னாங்க...
பாத்துக்கிட்டு
இடிச்ச புளி மாதிரி
நிக்கிறீங்க...!"

அந்த
நாத்தப் பய தோலை
நார் நாராக் கிழிச்சில்லே எறியணும்...
பன்னிய வீட்டுக்குள்ள நுழைய விடுற
அளவுக்கு இருந்தா...

என்று "சரி சரி
முதல்லே ஒந்
திருவாயே மூடு...!"
பதற்றத்தோடு
வேலி அடைக்க வந்த