பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

||||————————32


ஏய்க்கிற மூதேவியைத் .
தெரிஞ்சுக்க வேண்டாமாடா...

அவதாரமா போடணும்
அவதாரம்!

அடுத்த நிமிடம்!”
கூலி ஆட்கள்
பக்கம் திரும்பினார்....

"ஏம்ப்பா....
ஏதோ விருந்து சோறு
கிடைக்கும்னு
கேள்விப்பட்டவுடனேயே
கொண்டு வந்த
பழைய சோத்தை
கொல்லையிலே
போட்டுட்டுப் பதினோரு மணிக்கே
போயிடணுமா?

வந்த வேலைய
கவனிக்காமே
டெபாசிட் கணக்கா எடுக்குறீங்க..?

நானும்
மாடியிலே இருந்து
கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்...!