பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

———40


  'ஆ' என்று கத்தி
  வண்டியோட்டிக்
  குதிப்பதற்குள்
  வண்டியின்
  வலது சக்கர வட்ட ஆரங்கள்
  அனைத்தும்
  கோடாலியே தேவைப்படாத
  விறகு களாகவே
  அவதாரம் எடுத்து விட்டன:


  கடை சாய்ந்து
  கூண்டு நொறுங்கிய
  வண்டியிலிருந்து
  வந்த
  முதல் ஐயோ!' வும்
  மேன்மைக்கு
  ஒரு மாதிரியினுடையதுதான்!


  மூன்று நாட்கள் கழித்து
  இரண்டு காரியங்கள்
  நடந்தன!


  நொறுங்கிப் போன
  வண்டியின்
  இதர இரும்புப் பாகங்ளோடு
  அந்தத்
  'தறுதலைக் கட்டும்
  கொல்லுப்