பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53————————||||

உப்புமண்டித் தெரு

கதிரவனுடன்
வீடு திரும்பிக் கொண்டிருந்த
திருவம்பலம் பிள்ளையின்
நினைவுகள்
கனகாவையும்
அவளுக்குப் பிடித்த
ரவா கேசரியையும்
மாறி மாறி
மொய்த்தன!


ஆவி பறக்கும்
சூட்டில் மட்டுமல்ல!
ஆறி -
நெய் வெள்ளை
படர்ந்த பிறகும்
ரவாசேகரிக்கு
ஒரு வித்யாசமான
சுவை உண்டு .
இன்றைய
கனகாவும்
அப்படித்தானோ!