பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ. கோ. சண்முகம்

||||————————56

பயிரிடத் தொடங்கியிருந்த
'வம்புச் சவால்'
குட்டிக் கட்டுரையின்
வெட்டுத் துண்டை
அவரிடம் கொடுத்து -
"இந்தச் சவாலை
நீங்கள்
ஏற்றுக் கொள்கிறீர்களா...?"
என்று
தடித்த குரலில் கேட்டார்!
கேட்டு விட்டுத்
தன் சகாக்கள் மீது
பார்வைச் சக்கரத்தைச்
சுழற்றினார்!


அந்த
அடி ஒற்றிகளும்
லோட்டாக்களும்
எதிர்ப்பே இல்லா
தங்களைத் தாங்களே
சுய ஆராதனை
செய்து கொண்டனர்!
வேடிக்கை பக்ஷணிகளுக்கோ
வியப்பு வீங்கத்துவங்கியது!
இது-
அவர்களுக்கு