பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71 ————————||||

உப்புமண்டித் தெரு

"இரண்டே இரண்டு நிமிஷங்களில்

கடவுள் உண்டு என்பதை

நிரூபித்துக் காட்டி விடுகிறேன்!

ஆனால் எல்லோருக்கும் அல்ல!

உங்களில்

ஆறே ஆறு பேர்கள் மட்டும்

என் பின்னால்

உடனே

அடுப்பங்கரைக்கு

வாருங்கள்!”

- இப்படிச் சொல்வி விட்டுத்

தனது

அடுப்பங்கரைக்குள்

நுழைந்தார்

பரமநம்பி!


இளங்கவிஞனும்

இளம் விஞ்ஞானியும்

அவரையும்

முந்திக் கொண்டு

அவரது

அடுப்பங்கரைக்குள்

ஓடினார்கள்!


அவர்களைத் தொடர

அச்சிறு கூட்டம்

முட்டி மோதியது!