பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

||||———————— 72

விதண்டாவாத மாவீரர்

தன் லோட்டாக்களில்

குள்ளமாக இருந்த

ஒருவரைப் பார்த்து

“டேய்! அறிவுப் பரிதி!

ஒடியாடா என் பின்னாலே!”

என்று

அவசர அவசரமாக

அழைத்தார்!


அறிவுப் பரிதி அவருடைய

மைத்துனர்!

அவருடைய

எதிர்கால மாப்பிள்ளை!

அந்த

எதிர்கால மாப்பிள்ளையும்

விதண்டாவாத தலைவரைத் தொடர்ந்து

அடுப்பங்கரைக்குள் ஓடினார்!


விதண்டாவத தலைவரின்

வாரிசு என்று கருதப்பட்ட

தணலழகன்

இப்போது

தணல் மலையாகவே மாறிவிட்டார்!


தலைவர்

தன்னைக் கூப்பிட்டுக் கொண்டு

போகாத ஆத்திரம்