பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

||||———————— 76

புரியாத தென்று.

பொய்ம்மை என்று

புறக்கணித்து வந்ததை

அவ் விஞ்ஞானி

அக் கணத்திலிருந்து

மெல்ல

மெல்ல

உணரத் தொடங்கி விட்டான்!

அறிவு வீங்களுக்குத்தான்

ஆத்திரம் கொப்பளித்தது!

ஏய், கிழப்பயலே!

கிறுக்கு புடிச்சவனே!

எங்களை எல்லாம்

ஏமாத்தவா பாக்கிறே...?

-'இண்ஸ்ட்டண்ட்ஃபைனான்சியர்'தான்

எல்லோர் சார்பிலும்

தன் ஒற்றை

டப்பாத் தொண்டையால் கத்தினார்!

அப்போதும்

ஆத்திரமடையாத

பரமநம்பி

'இன்னுமா, புரியவில்லை உங்களுக்கு?

விளக்கமா, வேண்டும், ஐயோ!'

என்றார்!

'கிராப்பா அடிக்கப் பாக்கிறே!'