பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

————————78

அவநம்பிக்கை
கொள்ளவே மாட்டான்!
நீங்களோ,
‘நிரீஸ்வரவாதம்’ என்ற பெயரில்
நீண்ட நெடுங்காலமாக
'இல்லை!’ என்ற
ஒரே பல்லவியை
ஒயாமல் பாடிக் கொண்டிருக்கிறீர்கள்!
வெறும்
உதட்டோசையாகவே
அது ஒலித்துக் கொண்டிருக்கிறது!
நன்றாக கவனியுங்கள்!
நண்பர்களே!
நன்றாக கவனியுங்கள்!
வெளி அறையில்–
'கடவுள் இல்லை’ என்று
உறுதியாக
உண்மையாக
முடிந்த முடிவாக
நம்புபவர்கள் மட்டும்
உள்ளே இருங்கள்!
மற்றவர்கள் வெளியே
போய் விடுங்கள்!
என்று
நான் கேட்டேன் அல்லவா?