பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81 ————————

உப்புமண்டித் தெரு


விஞ்ஞானப்
பிள்ளையாண்டான் கூடவா
இப்படித் தடம் மாறி -
தடுமாற வேண்டும்...?


ஐயோ! ஆண்டவனே...!
எப்போதோ
மூத்த மூத்த
நுாற்றாண்டுகளில் –
யார் யாரோ
கண்டு தெளிந்த
அல்லது
கண்டு தெளியாமலே போய்விட்ட
பேரண்ட –
பிரபஞ்ச ஒட்ட –
இயல்புகளை எல்லாம்
செரித்து ஜீரணித்து
முன்வைத்துக் கொண்டு
மூளையைச் சூடாக்கி -
புதிய புதிய
கண்டுபிடிப்புகளுக்கெல்லாம்
மகாமகத்துவமான
வித்தையல்லவா
விஞ்ஞானம்!


அப்படி இருக்கும்போது
அண்ட பேரண்ட
ஆதிநாயகனை