பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வ.கோ. சண்முகம்

————————— 88


அவை
கடவுள் படங்கள் அல்ல! -


ராட்டையோடு ஒன்று!
நவகாளி ரத்தவீதியில் ஒன்று!
மார்பில் குண்டு காயங்களை
மறைக்கும்
மாலைக் குவியலோடு ஒன்று


அப்படியே -
அதிர்ந்துபோய்
பாறையானான்
கவிஞன்!
அவனது
இமைகளோடு
இணைந்து
இப்போது
இன்னொன்றும்
அவனுள்
அழத் தொடங்கியது!


அது -
அவனுக்குள்
புதிதாக
பிரதிஷ்டையாகி விட்ட
‘ஆத்மா!’