பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளிவிட்டுத் திகழும்படி செய்து விட்டார் நமது கவிமணி, ஆங்கில உலகில் ப்விட்ஜிரால்ட் என்ன மதிப்பைப் பெற்றுள்ளாரோ அம்மதிப்பு நம் கவிமணி அவர்களுக்கும் உரியது. இவர் மூலமாய் நமது நாட்டில் உமார்கய்யாம் ஓர் அற்புதமாள் மறுபிறவியை எடுத்துள்ளார்.

“இரான் தேசத்துக் கவிஞர்களுள் உமார் ஒரு சிறந்த கவிஞர் என்று கூடச் சொல்ல முடியாது. தம் காலத்தே இவர் பீஜ கணிதத்தில் ஒரு சிறந்த மேதாவியாகவும், ஜோதிஷத்தில் ஒரு நிபுணராக்வும் புகழ் பெற்றிருந்தார். இவர் அராபி மொழியில் இயற்றிய பீஜகணிதம் மிகப் பலவாய்ப் பிரதிகள் செய்யப்பட்டு. பலராலும் கற்கப்பட்டு வந்தது. இவர் இயற்றியுள்ள் முகம்மதியப் பஞ்சாங்கம் கணிதத்தில் இவருக்கிருந்த பெருந்திறமையைக் காட்டவல்லதென்பர். இவரது ஆழ்ந்த கல்வியறிவு முதலியவற்றையெல்லாம் தற்கால மக்கள் மறந்துவிட்டார்கள். மறவாது போற்றுவது எவற்றை என்றால், வாழ்க்கையைக் குறித்தும், அது பயனின்றி வறிதாயுள்ள தன்மையைக் குறித்தும் இவர் சிந்தித்து எழுதியுள்ள வற்றைத்தான். இவற்றிலே, லட்சக்கணக்கான மக்களுடைய உள்ளத்தில் தோன்றும் சந்தாப உணர்ச்சி பிரதிபலிக்கிறது.

“இக் கவிஞரது உண்மைப் பெயர் கியாதுடீன் அபுல்பாத் உமார். கி.பி.11- ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிஷபூர் என்ற நகரத்தில் இவர் பிறந்தனர். இவர் தமது பெயரோடு கய்யாம் என்பதையும் தாமே சேர்த்துக் கொண்டார். கய்யாம் என்பதற்குக் கூடாரம் செய்பவன் என்று பொருள். இத் தொழில் இவரது தந்தைக்கு இருந்ததுபோலும். இவர் பள்ளிக் கூடத்தில் வாசித்துக் கொண்டிருக்கும்போது, இவரது பள்ளித்