*-toừswiriö siirgþorth_Sloos*lw{più
பற்றிலா தனிமைலிருந்து பற்றுக் கோடோர் வீச்சொளி உற்ற ஐயம் தெளிவிரண்டின் ஊடு நிற்கும் சொல்லசை வெற்றிப் பரிசாய் வாழ்வில் நமக்குக் கிடைத்த நல் ஒரே கனி சற்றுநேரம் ஒரு கணந்தான்்! சாற்றினேன் என் தோழியே. இன்பத்தை நீ நாடித் தேடாய், இருப்பதெல்லாம் ஒர்கணம்; மன்னன் வளவன், மல்லன் எவரும் மண்ணின் துகளாய்க் கண்டிட்டோம். பன்னலம்சேர் உலகில் காணும் மனம் படர்ந்த காட்சிகள் மின்னல் இன்ப வாழ்வின் சாரம் மேவும் கனவு மாயையே.
கமழும் காலை மீனும் நிலவும் வானில் பூத்த நாள்முதல் குமிழிட்டொளிரும் மதுவை அன்றிக் குறித்த மேன்மை கண்டதியார்? இமைக்கும் ஒளி கொள் மதுவை விற்போர் என்னை வியப்பில் ஆழ்த்துவர், எமக்கு விற்கும் மதுவை விடவும் இனியதென்ன வாங்குவார்? 110 இருளின் சட்டைதனைக் கிழித்து நிலவின் கதிர்கள் தெறித்திடும், பருகுவாய் நீ மதுவை, வேறு பாங்கு மிக்க போழ்தில்லை; பெருமகிழ்வில் திளைத்திருப்பாய், பிறங்கும் நிலவுப் பேரொளி உறுதல் எங்கே? இருவர் நந்தம் கல்லறைகள் மட்டும்!
6ර් த. கோவேந்தன்