பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173


“அதெல்லாம் அழுது விட்டார். இனி அவர் அழப் போவதில்லை. மழை பெய்தபின் பூத்த பாலைவனத்துப் பூப்ப்ோல் இருந்த அவள் அடுத்த நாளே அடிபட்டதுபோல் போய்விட்டாள். வெள்ளிய பூப்போல அவள் தரையில் கிடக்கிறாள். இவ்வளவு இளமையான காலத்தில் இறந்துபோகும்படி நேர்ந்ததே!” என்று ஜபாரக் வருந்தினான்.

அந்த மனிதர்கள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயிருந்த மரத்தடியில் ஒரு மேட்டிலே பெரிய புதை யான்ற்ை வெட்ட நேர்ந்ததும், சாவுக் கூடாரத்திற்கு மூடப்பட்ட அந்தத் தொட்டிலைத் தூக்கிவரத் நேர்ந்ததும் என்றுமில்லாத வழக்கமாக அவர்களுக்குத் தோன்றியது. சிறுபெண்கள் பிரசவத்தின் போதும் நோயினாலும் இறந்துபோவது எதிர்பார்க்கக் கூடியதே! தலையில் அப்படி எழுதப்பட்டிருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? கரையிலே, ஆய்த்தமாக இருக்கும் தெப்பத்தை அவர்கள் சங்கடத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“அவன் பித்துப் பிடித்தவன்போல் இருக்கிறான்” என்று ஒருவன் வருந்தினான்.

“இதற்குப் போய் இவ்வளவு வருந்துகிறாரே! எண்ப வெள்ளிகள் கொடுத்தால் பாக்தாதிலே எத்தனையோ பெண்கள் வாங்கலாம்!” என்றான் ஒருவன்.

“சீ நாயே! உனக்கென்ன தெரியும்? காதலின் தன்மையும் ஆற்றலும் உனக்கு எப்படித் தெரியும்?” என்று ஜபாரக் சீறினான்.

அவன் உள்ளே சென்று நெடு நேரங்கழித்துத் திரும்பி வந்தான். அடிமைகளை அழைத்து, குன்றின் உச்சியில் தோண்டப்பட்டுள்ள புதை குழிக்குத் தொட்டிலை எடுத்துச் செல்லும்படி கூறினான்.

“தலைவர், அவளைத் தொட்டிலில் வைத்து, அவளுடைய வெகுமதிப் பொருளையும்கூடவே வைத்துவிட்டார். அவருடைய கையாலேயே எல்லாம் செய்து விட்டார்.

அவளைப் பிரிந்து விட வேண்டிய நேரம் வந்து விட்டதென்று எண்ணுகிறார். அவர் கீழே படுத்திருக்கிறார். சீக்கிரம் போய்த் தொட்டிலைத் தூக்கிக்கொண்டு வாருங்கள், சீக்கிரம்!” என்று அடிமைகளை ஏவினான் ஜபாரக்.