பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205


“இவருடைய போக்கே புரிபடவில்லையே. வேலை செய்தால், ஒரேயடியாக அதிலேயே ஆழ்ந்துவிடுகிறார். “இல்லாவிட்டால் மதுக் குவளையுடன் மனம் பேதலித்தவர்போல் தனியே உட்கார்ந்திருக்கிறார்” என்று இஸ்பிகாரி ஒருநாள் ஆச்சரியத்துடன் கூறினான்.

அவரைப்பற்றி அதிகம் தெரிந்தவர் போல், மைமன் “அவரிடம் ஓர் அதிசய சக்தியிருக்கிறது; ஆனால், அவர் போக்கு இப்படி யிருக்கிறது. மனத் தளர்ச்சி மட்டும் ஏற்படாவிட்டால், டோலமியைக் காட்டிலும் உமார் சிறந்து விளங்க முடியும்!” என்றான்.

ஆனால், கல்வியறிவில்லாத அங்க ஹீனனான ஜபாரக் மட்டும், உமாரின் நிலைமையை நன்கு உணர்ந்தவனாக இருந்ததால், இரவு நேரங்களில் எல்லாம் அவன் கூடவே உட்கார்ந்திருப்பான். தன் நண்பன் அருகிலே முடங்கிப் படுத்துக்கொண்டு, அல்லது உட்கார்ந்து கொண்டு, விளக்கு நாக்கு ஆடும்போதெல்லாம் உண்டாகும் நிழல் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே இருப்பான்.

அந்த மாதிரியான நேரங்களில் வேடிக்கைபேசுவது கிடையாது. “என் தலைவர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் இறந்தபோது, கடல்போல் கண்ணிர் பெருக்கி என் துன்பத்தைக் கழுவிக்கொண்டு விட்டேன். ஆனால் கூடாரமடிப்பவரே! நீங்கள் குடிக்கும் அந்தக் கோப்பை மது, அது உங்களை அழுது கண்ணிர் விடச் செய்யும் ஆற்றல் இல்லாததாக இருக்கிறதே! அழுது தீர்த்தால் அல்லவா துன்பம் ஆறும்? என்று சொல்லுவார்கள்.”

அப்படிச் சொன்னபொழுது, உமார் அந்தக் கோப்பையை உற்று நோக்கினான். “துங்கும் பொழுது துன்பத்தை மறக்கலாம். தூங்கமுடியாத பொழுது குடித்து மயங்கலாம். அதனால் மறதி ஏற்படும். நீ யார் என்றும், எதற்காக இந்த உலகத்திலே பிறந்தாய் என்றும் நீ உன்னையே தேடித் திரிவதைக் காட்டிலும் குடிப்பது சிறந்தது அல்லவா?

“ஆனால், அது அமைதியைத் தருவதில்லையே!”

“மறதியைக் கொண்டு வருகிறதல்லவா? ஜபாரக், இதோ கவனி. இந்த கோப்பையிலே இரசாயன சாஸ்திரத்தின் இரகசியம்