பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

விட்டானா?” என்று எண்ணி வியப்படைந்தான்.

“நாளைக் காலையில் நல்ல நேரந்தானோ? நான் மான் வேட்டைக்குப் போக வேண்டும்” என்று உமாரின் காதருகிலே வந்து சுல்தான் கேட்டார்.

உமார் புன்சிரிப்புடன், “நான் இங்கிருந்து செல்வதற்கு அனுமதியுங்கள். கிரக நிலைகளை ஆராய்ந்து சொல்கிறேன்” என்றான்.

அரண்மனையிலிருந்து தப்பி வந்தது உமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. விகடன் ஜபாரக், அவனை எங்கும் தேடி விட்டு, இங்கே வந்த பொழுது, விண்மீன் வீட்டிலே ஆராய்ச்சிக் கூடத்திலே விளக்கேற்றி வைத்துக் கொண்டு, மேசையிலே வேலை செய்து கொண்டிருந்தான். நிசாப்பூரிலே, ஆட்டமும் பாட்டுமாக இருந்தது. இங்கே உடைகளைக் கூடக் கழட்டாமல் வேலையில் ஈடுபட்டிருந்தான் உமார்.

“வேட்டையாடப் போவதன் குறிகளைத் தெரிந்துவரும்படி வேந்தர் கூறினார்” என்றான் ஜபாரக்.

பொறுமையிழந்த உமார் அவனை நோக்கி, “காற்று எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.

“தென் திசையிலிருந்து அமைதியாக வீசிக்கொண்டிருக்கிறது.”

“சரி, எங்கு அவருக்கு விருப்பமோ, அங்கு வேட்டையாடலாம். பயப்பட வேண்டியதில்லை என்று சொல்” என்றார் உமார்.

“வானத்தில் சாவுக்கொடி தொங்க விடப் பட்டிருக்கிறது என்று முல்லாக்கள் சொல்கிறார்களே?”

“மதக்குருக்கள்தானே! அவர்களுக்குப் புதிய பஞ்சாங்கம் அமுலுக்கு வந்ததால் கோபம் உண்டாகியிருக்கிறது. அதனால் சபிக்கிறார்கள். நேற்று எப்படி யிருந்தாரோ, அப்படியே நாளையும் மாலிக் ஷாவுக்கு இருக்கும் என்றும் எவ்விதத் துன்பமும் வராது என்றும் சொல்.”

“உறுதியாகவா?”