பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288


அங்கே ஒரு நாட்டியம் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டியமென்றால் பெண்கள் நடனமல்ல, நட்ட நடுவிலே இடுப்பில் மட்டும் உடை தரித்த ஒருவன் தன் கைகளை உயரே தூக்கிக் கூப்பியபடி நின்று கொண்டிருந்தான். அவனைச் சுற்றிப் பலர் கத்திகளைச் சுழற்றிக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தார்கள். அவன் தன் குதிகாலை உயர்த்தியபடியே மெதுவாகத் திரும்பியபடி,

“அல்லா இல்லாஹி அல்லல்லாகி இல்லாகி...”

என்று ஓதிக் கொண்டிருந்தான்.

இசையும், மணியோசையும், சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கத்தி நடனக்காரர்களின் இல்லாஹி இல்லாஹி என்ற ஒலியும் எங்கும் நிறைந்திருந்தது, கத்திகள் மின்வெட்டுப் போல் சுழன்றனவே தவிர ஒன்றுடன் ஒன்று மோதவில்லை. ஒவ்வொருவரும் இரு கரங்களிலும் இரண்டிரண்டு கத்தி வைத்துக் கொண்டு சுழற்றி ஆடிய வேகத்தில் அடுத்தவனின் உடல் துண்டித்து விழுந்து விடுமோ என்று பயப்படும்படியாக வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் உடல்களிலிருந்து வியர்வை முத்து முத்தாக அரும்பி வழிந்து கொண்டிருந்தது. இல்லாஹி இல்லாஹி என்ற தொழுகை ஓசை இடைவிடாது கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

எவ்வளவு நேரம் இப்படியே கத்தி நடனம் நடந்துகொண்டிருந்ததோ தெரியாது. ஆனால், முடியப்போகிற மாதிரி இருந்தது. ரக்கின் உட்டின் உமாரின் கையைப் பிடித்துக் கொண்டே மிக்சிரமத்தோடு, மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு மறுபக்கத்தில் ஒரு பையன் அழுதுகொண்டிருந்தான்.

திடீரென்று, ஒரு குரல் கிரீச்சிட்டது. “நேரம் வந்துவிட்டது. அவனைச் சொர்க்கத்துக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. சொர்க்கம் சொர்க்கம்” என்று கூவியது அந்தக் குரல்.

இன்னும் கைகளை மேலே தூக்கிக் கொண்டிருந்த அந்த அரை ஆடை மனிதன் பின்னுக்குத் தொங்கிய தன் தலையைத் திருப்பிச் சுழலும் கத்திகளைப் பார்த்தான்.

நடனக்காரர்களின் பின்புறத்தில் ஏதோ ஒன்றை உமார் கண்டான். ஆம், கொழுந்துவிட்டெரியும் நெருப்புக்கு ஊடே,