பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297

படிமம்:Page299 உமார் கயாம் (புதினம்).jpg

பிறகு, அவன் அவள் முகத்தைத் திருப்பிப் பார்த்தான். அது வெளுத்துப் போய் இருந்தது. அந்தக் கண்கள் அர்த்தமில்லாமல் அவனை நோக்கின. உதடுகள் உணர்ச்சியற்று இருந்தன.

அது, உமாரின் நினைவைக் குழப்பியது.

கடைசியாக நினைவு வந்து விட்டது. “ஸோயி, நீ ஸோயி தானே! அன்று கொரசான் பாதையிலே, என் நண்பனுக்காக நான் அழுதேனே. அப்பொழுது, நான் சாதாரண உமாராக, இபுராகீம் மகனாக இருந்தேன் உன்னை என்னிடமிருந்து அழைத்துச் சென்று விட்டார்கள்.” என்று கூறினான்.

வெள்ளி மயமான அந்த ஒளியிலே அசையாமல் கிடக்கும் ஸோயினுடைய உடல் சில்லிட்டு இருந்தது. அவன் கட்டியணைத்து முத்தமிட்ட போது அவளுடைய உதடுகளும் குளிர்ச்சியாக இருந்தன. அவளுடைய கையிலே தலையை வைத்துப் படுத்திருந்த அவன், அவனைப் பயமுறுத்தியதும் ஆடைகளை அகற்றியதும் எதுவென்று தெரியாமல் அதிசயப்பட்டான். ஆனால் எல்லையில்லாத இந்த இரவிலே, மிதந்து செல்லும் படகிலே, செத்தவள் போல் கிடந்தாலும், ஸோயி அழகாகவே இருந்தாள்.