பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330


நகருக்குள்ளே சென்றால், அங்குள்ள ஏழாவது கொள்கைக்காரர்களுக்குத் தன்னைப் பற்றிய செய்தி கிடைத்திருக்கலாம் என்ற பயம் இருந்தது. அத்துடன், காஸ்வின் நகரம்தான் கழுகுக் கூட்டிற்கு மிக அருகில் உள்ள நகரம். எனவே கோட்டையைச் சுற்றிக் கொண்டு மறுபுறத்திலே வந்து கொரசான் பாதையில் தன் குதிரையைத் தட்டிவிட்டான்.

துரத்து மலைகளின் வழியாக வானத்தை நோக்கிக் கிளம்பிய கதிரவ்னின் கதிர்கள் உலகத்தைச் சூழ்ந்திருந்த இருட்டை ஓடச் பதன. இரவெல்லாம் நடந்த களைப்பால், குதிரை தளிர்நடை போட்டது. உமாருக்கும் களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய சொப்பன்த்திலே ஒரு மாய உலகம் தோன்றியது. களிமண்ணாக இருந்த புறாக்கள் வானவெளியிலே பறந்தன. தபால் செய்திகளைச் சுமந்து போயின. தட் தட் என்று அவற்றின் இறக்கைகள் அடித்துக் கொண்டன.

தட் தட் என்ற சத்தம் வரவரப் பெரிதாகியது. உமார் கண்ணை விழித்துப் பார்த்தான். குதிரைகள் பல அவனைக் கடந்து சென்றன. அப்படிக் கடந்து சென்று கொண்டிருந்த ஒரு குதிரை அவன் அருகிலே நின்றது. அதிலிருந்து கீழே இறங்கி உமாரின் அருகிலே வந்த அந்தக் கூணன், ‘தலைவரே! என்னைத் தெரியவில்லையா? தங்கள் ஜபாரக்’ என்றான். அதே சம்யத்திலே, ஒட்டகத்தின் மேல் இருந்த மூடிய பிரம்புத் தொட்டிலிலிருந்து, ஒரு பெண் இறங்கி ஓடி வந்தாள்.

‘தலைவரே! நல்ல வேளை, உங்களை அல்லாதான் காப்பாற்றினார். கண்ணுக்குத் தெரியாத வேதாளங்கள் தங்களைத் தூக்கி போனதாகக் கூறினார்களே! இதென்ன உங்கள் தாடிக்கு என்ன வந்தது? என்று வரிசையாகக் கேட்டாள். முக்காட்டை விலக்கி விட்டுப் பேசிக் கொண்டிருந்த ஆயிஷாவைப் பார்த்து வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் விட்டார்கள் கூட வ்ந்த மற்ற பிரயாணிகள்.

‘பெண்ணே, அதோ அந்த தூரத்து மலைகளிலே, மாயவித்தைக்காரர்களுடன்தான் இருந்தேன்’ என்றான் உமார். அந்த மாயக்காரர்களுடன் யாரும் பெண்கள் இருந்தார்களா?’ என்று அயீஷா, பெண்ணுக்கே உள்ள இயற்கையான சந்தேகத்துடன் கேட்டாள்.