பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

331


‘அந்தச் சொர்க்கத்திலே ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள்.’

‘சொர்க்கமா?’

‘உண்மையான சொர்க்கமல்ல; மாயா சொர்க்கம்!’

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அரசாங்க வீரர்கள் சிலர் வந்தார்கள். அவர்களிலே தலைவனாக உள்ளவன் உமாரை உற்று நோக்கிவிட்டு, தாங்கள் அரசாங்க வானநூற் கலைஞரா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டான்.

பிறகு சுல்தான் இஸ்பாகானுக்குச் சென்று கொண்டிருக்கிறார். தங்களைத் தேடி உடனே அழைத்துக் கொண்டு வரச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார் என்றான்.

போகும் வழியில் அயீஷா, உமாரிடம், நிசாம் அல்முல்க் அவர்கள் அரசாங்க வேலையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார் என்று கூறினாள்.

என்ன காரணம் என்று உமார் கேட்டான்.

‘சுல்தானுக்கு ஒரு கடிதம் கிடைத்ததாம். அதிலே யாரோ, “நிசாம் தங்களுடைய மந்திரியா, அல்லது தங்களுடைய சுல்தானா? என்று எழுதிக்கேட்டிருந்தார்களாம்.

போர்க்களத்திலிருந்து கோபத்துடன் திரும்பி வந்த சுல்தான், அவரை உடனே விலக்கி விட்டாராம் என்று அயீஷா கூறினாள். பாவம், அன்றே நிசாம் சொன்னபடி சுல்தானுக்குக் கடிதம் எழுதியிருந்தால் அவருடைய பதவி போயிருக்காது என்று உமார் வருத்தத்துடன் நினைத்துக் கொண்டான்.

‘அந்தக் கடிதம் எப்படி வந்தது தெரியுமா? வானத்திலே பறந்து வந்த ஒரு புறா கொண்டு வந்து கொடுத்ததாம்’ என்றாள் ஆயிஷா.

உமார் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். இஸ்பாகான் நகர் அருகிலே வந்ததும் கீழே இறங்கி, ஒருதாளும் பேனாவும் மையும் கொண்டுவரச் சொன்னான்.

‘உன்னுடைய வேண்டுகோளுக்கு நான் முடிவு கட்டிவிட்டேன். உன்னுடைய பாதை வேறு என்னுடைய பாதை