பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

339

வந்து அவன் விட்டு வாசலிலே நின்று ரொட்டிப்பிச்சை கேட்கும் பிச்சைக்காரனுக்கு ஒரு மூட்டை தங்கம் கொடுக்க வேண்டும்.

அப்படிக் கொடுக்காதவன் ஆளே காணாமல் போய்விடுவான். இதுவரை கொடுத்துத் தப்பியவர்களும் இருக்கிறார்கள், கொடுக்காமல் காணாமல் போனவர்கள் ஐந்து வியாபாரிகள். அதுபோல் இன்று உங்கள் வீட்டுக்கு எவனாவ்து பிச்சைக்காரன் வந்தால், ஏதாவது ஒரு தொகை கொடுத்து அனுப்பிவிடுங்கள். அதுதான் புத்திசாலித்தனமானது’ என்றான் டுன்டுஷ்.

‘இல்லை, அவர்கள் என்னிடம் பொன் எதிர்பார்க்க மாட்டார்கள்’ என்றான் உமார்.

‘ஓ! நான் மறந்துவிட்டேன் உங்கள் பொருள்களைத்தான். அவர்களுடைய ஆள் அக்ரோனோஸ் கடத்திக் கொண்டு போய்விட்டானே! இருந்தாலும், அவர்கள் இன்னும் எதிர் பார்க்கலாம்!”

‘இல்லை, ஜபாரக்கினுடைய சாவிற்கு அவர்கள்தான் ஈடு கொடுக்க வேண்டும்! அப்படித்தான் நடக்கப்போகிறது!’

‘தலைவரே, நீங்கள் என்ன அவர்களை எதிர்க்கப் போகிறீர்களா? நேரிலே பாயும் வேங்கைப் புலியை எதிர்க்கலாம். மறைந்து வரும் பாம்பை நாம் எப்படிக்கண்டு பிடித்துக் கொல்லமுடியும்? இந்த மருந்து தின்னும் கூட்டத்தார்.

ஒட்டகக்காரர்களாகவும், குதிரைக்காரர்களாகவும், வியர்பாரிகளாகவும், சாமியார்களாகவும் பலவிதமான உருவங்களிலே நாட்டிலே உலவுகிறார்கள்.

உங்கள் வீட்டிலேகூட, அவர்களைச் சேர்ந்தவன் ஒருவன் வேலைக்காரனாக இருக்கக்கூடும்! இந்த காணர்ம்ற்போன் ஐந்து மனிதர்கள், மக்களுக்கு நன்றாகத் தெரிந்த பிரபல் வியாபாரிகள், எப்படி மறைந்தார்கள் என்று தடங்கூடத் தெரியவில்லை. நகரத்தைவிட்டு வெளியேறவில்லை என்று நான் நிச்சயமாக கூறமுடியும். ஜபாரக்கைப்போல் அவர்கள் கொல்லப்பட்டதர்கவும் இதுவரை தெரியவில்லை. அவர்கள் என்ன ஆனார்களென்பதே மர்மமாயிருக்கிறது. மேன்மை தாங்கிய தலைவரே, இந்த மனிதர்களுடன் மோதிக் கொள்ளாதீர்கள்’ என்ற டூன்டுஷின் எச்சரிக்கைக்குப் பிறகு, உமார் கூறினான்.