பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

357


‘பாடு, பயப்பட வேண்டாம்’ என்று அந்த முதிய நீதிபதி கூறினார்.

அந்த டாக்டர், உமார் கயாமின் ருபாயத் பாடல்களைப் பாடிவந்தார்.

யாஸ்மியைப் பற்றியும், மதுவைப் பற்றியும், விதியைப் பற்றியும், வாழ்வின் சுகதுக்கங்களையும் தான் எழுதிய பாடல்களைக் கேட்டுக் கொண்டு, உமார் புன்சிரிப்புடன் இருந்தான்.

‘இவையெல்லாம் பழிக்கப்பட்ட பாவங்களைப் பற்றியவை; ஆனால், இதோ இது, இந்தப்பாட்டு தெய்வ நிந்தனையானது, பாருங்கள்.

‘அருள்க மன்னிப்பருள் கென்றே யாமும் கூவித் தொழுகின்றோம்! அருளும் உன்றன் மன்னிப்பே யாண்டுச் சென்று சேர்ந்திடுமோ?’

உமார் வியப்புடன் நிமிர்ந்து, ‘இந்தப் பாடல் நான் எழுதியதல்ல’ என்றான்.

ஒருவரும் பதில் பேசவில்லை. காசாலி, வெறுப்புடன் உமாரைத் திரும்பிப்பாராமலே எழுந்து, கதவு நோக்கிச் சென்று வெளியேறிவிட்டான். அவர்களுடைய தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை உமார் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

உமார் எழுந்திருந்தான். அவனை நோக்கி உலேமாத்தலைவர், ‘உமார்’ நீ எதுவும் பேசவேண்டுமா?’ என்று கேட்டார்.

‘ஆம், சற்றுமுன் பாடியது என்னுடைய பாட்டல்ல. ஆனால், படிக்கப்படாத என்னுடைய பாட்டொன்று இதோ இருக்கிறது. இதைக் கேளுங்கள்:

    இறுதித் தீர்ப்பு நாளன்றே
    எழுமக் காலைப் பொழுதினிலே
    அருகில் உள்ள பொருளோடு
    யாமும் எழுவோம் என்றிருந்தால்