பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

365


பிறகு, மெதுவாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டர்ள். உலேமாத் தலைவரின் வீட்டுக்குப் போகும் வழியில், அங்காடிச் சந்தையில், பட்டுத் துண்க்கடையில் கூடிநின்ற முக்காடிட்ட பெண்களை எட்டிப் பார்க்காமல் இருக்க அவளால் முடியவில்லை.


47. தரகன் வந்து கூவுகிறான்

ஒட்டக மயிரினால் ஆன ஒரு கிழிந்த மேலங்கியைப் போட்டுக்கொண்டு வெறுங்காலால் நடந்துசென்று கொண்டிருந்த உமார், இருட்டிலே, கொரசான் பாதையிலே தட்டித் தட்விப் போய்க் கொண்டிருந்தான். வழிப்போக்கர் தங்கும் விடுதி ஒன்றின் எதிரிலே, யாரோ நெருப்புக்காய எரித்த நெருப்புக் கிடந்தது.

அந்த அமுங்கிக் கிடந்த நெருப்புக்கு நேரே தன் பாதங்களை நீட்டிக் குளிர் போக்கிக் கொண்டிருந்தான்.

சற்று சூடேறியதும் சுற்றிலும் கிடந்த காய்ந்த இலைகளைப் பொறுக்கி வந்துபேர்ட்டு, மேற்கொண்டு எரித்துக்குளிர் காய்ந்து கொண்டிருந்தான்.

காலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு குதிரை ஓடிவரும் சத்தம் கேட்டது.

விடுதியின் அருகில் சத்த்ம் கேட்டது. விடுதியின் அருகில் வந்ததும் குதிரையைவிட்டு இறங்கி, ஒரு வீரன் அவன் அருகிலே வந்தான்.

‘ஏ! காவல்காரா! இது அலெப்போ நகருக்குப் போகும் பாதைதானா?’

‘ஆம்!’

‘ஒ! அல்லா! நிசாப்பூரிலிருந்து எவ்வளவு தூரம் வருகிறது.’ குவாஜா உமார் கயாம் அவர்கள் இந்தப் பாதையாகத் தன் ஒட்டகங்களுடன் பயணம் செய்து கொண்டு இருக்கிறாரா? நீ பார்த்தாயா?’

உமார் பதில் சொல்வதற்கு யோசித்தான். அற்குள்ளே வெளியில் வந்த் விடுதிக்காரன் ‘இங்கே ஒரு வியாபாரிதான் தங்கியிருக்கிறார், அவர் குவாஜாவும் அல்ல; கயாமும் அல்ல!’ என்றான்.

‘நான்தான்’ என்றான் உமார், சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.