பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலக ஆட்சி

51

5. பொதுப்பிரிவு, பெரும்பிரிவு, உட்பிரிவு, பொருள் அகராதி முதலியனவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.

நூலகம் பற்றிய எந்தத் திட்டத்திலும் குறைபாடுகள் இருக்கவே செய்யும். சில நூலகத் தலைவர்கள் புதிய திட்டங்களைப் புகுத்தி இந்தக் குறைபாடுகளை நீக்க முயலுவர். அவ்வாறு முயலுவோர் உள்ள திட்டத்தை முதலில் ஆராய வேண்டும். இருப்பதை நன்கு ஆராயாமல் மேற்கொள்ளும் எந்தப் புதிய திட்டமும் பயனளிக்காது. அதனல் காலமும் கருத்துமே வீணுகும். சீர்திருத்தம் செய்ய வேண்டுமானல் நடைமுறையில் இருப்பதையே சீர்திருத்த வேண்டும். அதற்காக எண்களை மாற்றலாம்; நூல் அலமாரிகளை மாற்றலாம். இத்தகைய சிற்சில மாற்றங்களை வேண்டுமானல் அவ்வப்போது செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் பொழுது நன்கு ஆராய்ந்து அவசரப்படாமல் மெதுவாகச் செய்தல் வேண்டும். அடுத்து வகைப் படுத்தும் முறையினை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிவகைகளைப்பற்றி ஆராய்வோம். வகைப் படுத்தும் முறையினைப் பழக்கத்திற்குக் கொண்டுவரு முன், அம்முறையின் தன்மை, அது அமைந்திருக்கும் வகை, வரிசை, அங்கங்கே காணப்படும் கலைச் சொற்களின் பொருள், அட்டவணை அகராதி ஆகியவற்றை நாம் நன்கு ஆராய்ந்து அறிந்து மூளையில் தேக்கிக் கொள்ளல் வேண்டும். இவற்றை எளிதில் அறிவதற்கு வழியுண்டு. தெரிந்த ஒருவரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இம்முறைகளைக் கருத்திற் கொண்டு அவற்றின்படி, வாங்கிய நூல்களை அடுக்கிப் பார்த்தலே ஆகும். நாளாவட்டத்தில் வகைப் படுத்தும் முறை ஓரளவுக்குக் கைவந்துவிடும். அவ்வாறு வந்த பின் நாம் பிறர் துணையின்றி நூல்களை வகைப் படுத்தலாம்.

ஒரு நூல் வந்திருக்கிறது. அதனை நூலகத்தில் சேர்க்க